Ads (728x90)

தினமும் கந்த சஷ்டி கவசத்தை பாடுவோருக்கு மதிப்பு, மரியாதை உண்டாகும். மனம், உடல் வலிமை அதிகரிப்பதோடு, முக வசீகரம் ஏற்படும். முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமைகளில் மூன்று முறை கந்த சஷ்டி கவசத்தைப் படிப்பதால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

கந்த சஷ்டி கவசம் தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றுகின்றது. இது முருகனின் அருளைப் பெறுவதற்காக இயற்றப்பட்டது.

கந்த சஷ்டி கவசத்தில் கவசம் என்றால் நம்மைத் தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றக்கூடிய ஒரு பொருள் என்றும் கூறலாம். 

கந்த சஷ்டி கவசத்தை இயற்றிய ஸ்ரீ தேவராய ஸ்வாமிகள் அதீத முருக பக்தர். இவர் ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார்.

சஷ்டி கவசத்தை தினம் இரு வேளையிலும் அதாவது காலையிலும், மாலையிலும் ஓதுதல் சிறந்தது.

இதன் ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு ஆகியவைகளைக் குறிக்கும்.

செவ்வாய் ரோகக்காரகன் இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திருமுருகப்பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி. சஷ்டி என்றால் ஆறு. முருகனுக்கோ ஆறு முகங்கள். சரவணபவ என்பது ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர்.

நாம் கந்த சஷ்டி கவசத்தை விடாது படித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும்.


Post a Comment

Recent News

Recent Posts Widget