Ads (728x90)

நாடளாவியரீதியில் 200க்கும் மேற்பட்ட அரச தெபழிற் சங்கங்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து நாளை மற்றும் நாளை மறுதினமும் பணிக்கு சமூகமளிப்பதில்லை என தீர்மானித்துள்ளன.

எதிர்வரும் 9ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிப்பதில்லை என அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை அஞ்சல் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் நாளை மறுதினமும் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார மேலும் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget