Ads (728x90)

அரசாங்க ஓய்வூதியதாரர்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவாக 3,000 ரூபா வழங்குவதற்கு இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அதன்படி சம்பள முரண்பாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை 2024 செப்டெம்பர் மாதம் முதல் இந்த விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அரசு சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பாக தனி குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அந்த குழுவின் ஆலோசனைப்படி செப்டம்பர் மாதம் முதல் ஓய்வூதியதாரர்களுக்கு 3,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. இதனால் சுமார் 7 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலன் பெறுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget