Ads (728x90)

தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.

போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று வெள்ளிக்கிழமை முதல் வழமைபோல தொடருந்து சேவைகள் இடம்பெறும் என தொழிற்சங்கம் குறிப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அவர்கள் பணிக்கு திரும்பினால், சேவையை விட்டு வெளியேறியதாகக் கருதி வழங்கப்பட்ட கடிதங்கள் திரும்பப் பெறப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget