Ads (728x90)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக, பிரபல தொழில் அதிபரும், தாயக மக்கள் கட்சியின் தலைவருமான திலித் ஜயவீர ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நேற்று பிற்பகல் நடைபெற்ற சர்வஜன அதிகார மாநாட்டில் வைத்தே இந்த அறிவிப்பு விமல் வீரவங்சவால் வௌியிடப்பட்டுள்ளது.

இன,மத வேறுபாடுகள் ஏதும் இல்லாத வகையில் சிறந்த வினைத்திறனான அரசியல் கட்டமைப்பை தோற்றுவிப்பேன். இலங்கையர்கள் அனைவரும் கௌரவமாக வாழும் சூழலை உருவாக்குவேன். எமது நாட்டு மக்கள் பாவம் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலில் பிரவேசித்துள்ளேன்.

என்மீது வைக்கும் நம்பிக்கையை பலவீனப்படுத்தமாட்டேன். பொருளாதார மீட்சிக்கான கொள்கையை இவ்வாரம் பகிரங்கப்படுத்துவேன் என சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

இளைஞர்கள் விரும்பும் வகையில் அரச நிர்வாகத்தை முன்னெடுத்து அரச சேவை வினைத்திறனானது என்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சூழலை தோற்றுவிப்பது எனது பிரதான கொள்கையாகும். பொருளாதார மீட்சிக்கான எமது கொள்கை திட்ட வரைபை இவ்வாரமளவில் வெளியிடுவேன்.

சர்வஜன சக்தியின் மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதன்போது விசேட உரை நிகழ்த்துகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget