Ads (728x90)

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய.ஆர்.செனவிரத்ன தலைமையிலான நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி 2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 24 – 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளது.

அலுவலக உதவியாளர்களுக்கு தரநிலை அடிப்படையில் 5450 – 13,980 ரூபா வரையில் சம்பள அதிகரிப்பு.

சாரதிகளுக்கு 6960 – 16,340 ரூபா வரையில் சம்பள அதிகரிப்பு.

சமூர்த்தி/அபிவிருத்தி/விவசாய ஆய்வு அதிகாரிகளுக்கு 8,340-15,685 ரூபா வரையில் சம்பள அதிகரிப்பு.

முகாமைத்துவ உதவியாளர்களுக்கு 12,710 – 17,550 ரூபா வரையில் சம்பள அதிகரிப்பு.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு 12,710 – 25,150 ரூபா வரையில் சம்பள அதிகரிப்பு.

பொது சுகாதார பரிசோதகர்/குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களுக்கு 12,558 -25,275 ரூபா வரையில் சம்பள அதிகரிப்பு.

கதிரியக்கவியல்/ மருந்தாளர்களுக்கு 13,280 – 25,720 ரூபா வரையில் சம்பள அதிகரிப்பு.

தாதியர்களுக்கு 13,725 – 26,165 ரூபா வரையில் சம்பள அதிகரிப்பு.

அதிபர்களுக்கு 23,245 – 39,595 ரூபா சம்பள அதிகரிப்பு.

ஆசியர்களுக்கு 17,480 – 38,020 ரூபா சம்பள அதிகரிப்பு.

பொலிஸ் அதிகாரிகளுக்கு 10,740 – 23,685 ரூபா சம்பள அதிகரிப்பு.

கிராம சேவகர்களுக்கு 11,340 – 23,575 ரூபா சம்பள அதிகரிப்பு.

நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு 28,885 ரூபா சம்பள அதிகரிப்பு.

பிரதிப் பணிப்பாளர்/பிரதி ஆணையாளர்களுக்கு 43,865 ரூபா சம்பள அதிகரிப்பு.

பிரதேச செயலாளர்/பணிப்பாளர்/ஆணையாளர்/சிரேஷ்ட உதவிச் செயலாளர் பதவிகளுக்கு 57,545 ரூபா சம்பள அதிகரிப்பு.

வைத்திய அதிகாரிகளுக்கு 35,560 – 53,075 ரூபா சம்பள அதிகரிப்பு.

அரச கூட்டுத்தாபனம்/சபைகள்/நியதிச் சட்ட நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்கள்/ முப்படையினருக்கும் 2025 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து சம்பள அதிகரிப்பு வழங்கப்படும்.

அரச சேவையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான நிபுணர் குழுவின் பரிந்துரைகள் நிதி அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget