யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அநுரகுமா திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்படும் பணம்தான் இன்று பல அரசியல்வாதிகளின் பரப்புரைகளுக்குப் பயன்படுகின்றது. போதைப்பொருளின் பின்னணியில் அரசியல்வாதிகளே உள்ளனர்.
போதைப்பொருள்கள் இலங்கைக்கு உரியனவையா? இல்லை. அவை கொண்டுவரப்படுகின்றன. அதை அனுமதிக்கின்றனர்.
எனவே ஆட்சிக்கு வந்ததும் போதைப்பொருள் குழுக்கள் அடியோடு துடைத்தெறியப்படும். இந்த உத்தரவாதத்தை நான் மக்களுக்கு உறுதியுடன் தருகின்றேன் என்றார்.
Post a Comment