Ads (728x90)

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 253 வாகனங்கள் முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த நபர்களின் பெயர்கள் நாட்டு மக்களுக்கு வெளியிடப்படும் என்றும், இவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த வாகனங்கள் தொடர்பாக தீர்க்கமான விசாரணைகளை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாம் உரிய நடவடிக்கை எடுப்போம். யார் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தது என்ற விபரங்களை நாம் நாட்டு மக்களுக்கும் வெளிப்படுத்துவோம்.

அரச அதிகாரிகள் இதற்காக எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஏனெனில், இவர்களுக்குத்தான் இந்த வாகனங்களை யாருடையது, யார் பயன்படுத்தியது என்ற அனைத்து விடயங்களும் தெரியும்.

ஏன்? இவர்கள் இந்த வாகனங்களை ஒப்படைத்துவிட்டு ஒழிய வேண்டும். அதாவது உரிமையில்லாதவற்றை பயன்படுத்தினால்தான் பயப்பட்டு ஒழிய வேண்டும்.

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 253 வாகனங்களும் வெளியாட்கள் பயன்படுத்துகிறார்கள். இவைதான் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலக அதிகாரிகளிடம், வாகனங்களை பயன்படுத்திய நபர்களின் பெயர் விபரங்களை கோரியுள்ளோம்.

இந்த அனைத்து நபர்களுக்கு எதிராகவும் எதிர்க்காலத்தில் சட்டநடவடிக்கை மேற்கொள்வோம்.

ஜனாதிபதி இது தொடர்பாக உறுதியாகவுள்ளார். இது மக்களுடைய வாகனங்கள். இவை மீளவும் மக்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget