Ads (728x90)

சுங்கத் திணைக்களம் இவ்வருடத்தின் 08 மாதங்களில் 1,000 பில்லியன் ரூபாவை சுங்க வருமானமாக ஈட்ட முடிந்துள்ளதாக சுங்கப்பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டிற்காக சர்வதேச நாணய நிதியம் 1,534 பில்லியன் ரூபாவை வருமான இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆனால் 2024 ஆம் ஆண்டின் 08 மாத நிறைவில் 1,000 பில்லியன் வருமான இலக்கை எட்டியிருப்பதால் இந்த வருடத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடுத்த 04 மாதங்களில் எட்ட முடியும் என சுங்கப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

சுங்கக் கட்டமைப்புக்குள் காணப்பட்ட மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கும், கடத்தலை முற்றாக நிறுத்துவதற்கும் சுங்க ஊழியர்கள் வழங்கிய பங்களிப்பும் பெரும் உதவியாக அமைந்திருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget