இவர் இலங்கையின் பிரதமராக பதவியேற்கும் 3ஆவது பெண் பிரதமர் ஆவார். இதற்கு முன்னர் உலகின் முதல் பெண் பிரதமரான ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோர் இலங்கையின் பிரதமர்களாக பதவி வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2020 பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கலாநிதி ஹரிணி அமரசூரிய, அரசியலில் நுழைவதற்கு முன்பு நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் துறையில் மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். கலாநிதி ஹரினி அமரசூரிய இலங்கையின் 28 வது பிரதமர் ஆவார்.
பிரதமர் நியமனத்தை தொடர்ந்து இடைக்கால அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதுடன் இன்று நள்ளிரவுடன் பாராளுமன்றமும் கலைக்கப்படவுள்ளது.
Post a Comment