Ads (728x90)

விடுமுறையில் வௌிநாடு சென்ற அரச ஊழியர்கள் விடுமுறை நிறைவடைந்த பின்னர் உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்காவிடின் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவார்கள் என பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சுற்றுநிருபம் பொதுநிர்வாக அமைச்சு செயலாளரின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ளது.

வௌிநாட்டு விடுமுறை காலத்தை நீடிக்க வேண்டுமாயின் முதலாவது விடுமுறை காலம் நிறைவடைவதற்கு முன்னர் அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டுமென பொதுநிர்வாக அமைச்சால் அரச நிறுவன பிரதானிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை காலத்தை நீடித்துக்கொள்ளும் அனுமதியை பெறுவதில் ஏற்படும் சிக்கல் ஏற்கனவே பெறப்பட்ட விடுமுறை காலப்பகுதிக்குள் தீர்க்கப்படா விட்டால் உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்க வேண்டியது கட்டாயம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் வௌிநாட்டு விடுமுறை தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்தை மீறும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget