Ads (728x90)

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய எந்த ஒரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெறவில்லை என தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

2024 ஜனாதிபதி தேர்தலில் இதுவரை வெளியான வாக்குகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 5,634,915 (42.31%) வாக்குகளைப் பெற்று முன்னிலையிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 4,363,035 ( 32.76%) வாக்குகளைப் பெற்று 2 ஆவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 2,299,767  (17.27%) வாக்குகளைப் பெற்று 3 ஆம் இடத்திலும் உள்ளனர்.

இந்நிலையில் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக தற்போது விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது.

அதிகூடிய வாக்குகளைப் பெற்ற சஜித், அநுர தவிர ஏனைய சகலரும் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு 2 வது விருப்பு வாக்கு எண்ணும் பணி ஆரம்பமாகியுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget