Ads (728x90)

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான 330 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 3ஆம் கடன் தவணை தொடர்பில் ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பான விசேட ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 4 வருட காலப்பகுதியைக் கொண்ட நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் நாட்டின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக அவர் கூறினார்.

இந்த கலந்துரையாடல்களின் பிரதிபலனாக ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீடடர் ப்ரூவர் தெரிவித்தார்.

ஊழியர் மட்ட இணக்கப்பாடு தொடர்பான உடன்படிக்கை அங்கீகாரம் பெறுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவம் மற்றும் நிறைவேற்று சபைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசாங்கத்திற்கான மக்கள் ஆணை, ஊழல் இன்றி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கானது எனவும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இதன்போது வலியுறுத்தினர்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget