Ads (728x90)

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அடுத்து வரும் நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை இடம்பெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேற்படி 3 நாட்களுக்குரிய பரீட்சை டிசம்பர் மாதம் 21, 22 மற்றும் 23ஆம் திகதிகளில் இடம்பெறும் எனவும், அதற்கான நேர அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார்.

கனமழையால் அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களிலேயே பரீட்சை எழுத முடியும் என பரீட்சை திணைக்களம் முன்னர் அறிவித்திருந்தது.


Post a Comment

Recent News

Recent Posts Widget