நேற்று யாழ்ப்பாணம், பலாலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டின் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு ஒருவிதமாகவும், பணம், பொருள் படைத்தவர்களுக்கு அவை வேறுவிதமாகவும் கடந்த காலங்களில் பிரயோகிக்கப்பட்டுள்ளன. எனவே அனைவருக்கும் நீதி சமமாக வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே நாங்கள் நாடாளுமன்றத்திற்கு ஊழலற்றவர்களை தெரிவு செய்து அனுப்பவேண்டும்.
யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவது கடினம் என்ற போதிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தன்னால் முடியுமானவற்றை செய்யும்.
ஈ.பி.டி.பி தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வழங்கும் எண்ணம் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க நேற்று யாழில் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் ராஜபக்ச அல்லது விக்ரமசிங்கே அரசாங்கங்களில் அமைச்சராக இருந்து நாட்டை அழித்த எவருக்கும் அமைச்சர் பதவிக்கு இடமில்லை.
தேவானந்தா ஜனாதிபதியை சந்திக்க அவகாசம் கேட்டார். முன்னாள் அமைச்சர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் ஜனாதிபதி அவ்வாறான கோரிக்கைக்கு அனுமதி வழங்குவது அரசியல் தார்மீகமாகும். தேவானந்தா ஜனாதிபதியை சந்தித்தபோது ஜனாதிபதியுடன் புகைப்படம் எடுத்தார்.
புகைப்படத்தை வடக்குப் பத்திரிகைகளில் வெளியிட்டார். முகநூலில் பதிவிட்டார். ஜனாதிபதி அவருக்கு உதவுவதாகச் சொல்லி பெரும் விளம்பரம் செய்துள்ளார். அவர் கடிதம் எழுதியதாக கூறினார். தான் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த போது அமைச்சுப் பணிகளைப் பற்றி பேசியதாக மக்களிடம் பொய் கூறினார். டக்ளஸ் தேவானந்தாவை நினைத்து வெட்கப்படுகிறோம்.
இப்போது தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றதும் ஆட்சியில் இணைவேன் என்று எல்லா இடங்களிலும் கூறி வருகிறார். டக்ளஸும் அவருடைய அடியாட்களும் இன்றும் எல்லா இடங்களிலும் இந்தப் பொய்யைத் தொடர்ந்து சொல்கிறார்கள்.
ராஜபக்ச, விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபாலவுடன் இணைந்து வடக்கை அழித்தது யார்? தேவானந்தா இலங்கையை அழித்த அமைச்சரவையின் முன்னாள் உறுப்பினர்.
சுமந்திரனின் ஆதரவாளர்களும் சிறீதரனின் ஆதரவாளர்களும் இதையே செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஏழை தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை கேட்கிறார்கள். யுத்தத்தின் போது ஏழை தமிழ் மற்றும் முஸ்லிம்களின் நிலங்களை அபகரித்தனர். வெற்றி பெற்றால் தேசிய மக்கள் சக்தியை ஆதரிப்போம் என்று வாக்கு கேட்கிறார்கள்.
நீங்கள் திசைகாட்டிக்கு வாக்களித்தால், மற்றவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? திசைகாட்டிக்கு வாக்களித்தால் முடிந்துவிட்டது. திசைகாட்டி என்பது திசைகாட்டியே தவிர வேறில்லை. அமைச்சர்களும் திசைகாட்டியில் உள்ளவர்களாகவே இருப்பார்கள்.
Post a Comment