வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக்கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த தேர்தலில் பிரச்சாரத்திற்காக இந்த மாவட்டத்துக்கு வந்தார். வன்னி மக்கள் ஓரளவு வாக்கை அவருக்கு வழங்கியிருந்தனர். இந்த தேர்தலில் அவர் வருவாரா? அதே போல் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவரும் வந்தார்.
இந்த தேர்தலுக்கு அவர் இங்கு வருவாரா? வரவில்லை ஏன்? அவர்கள் அவர்களது வெற்றிக்காக மாத்திரமே தேர்தலில் நின்றார்கள்.
ஜனாதிபதித் தேர்தலில் வன்னியில் எமக்கு வீழ்ந்த 21 ஆயிரம் வாக்குகளும் எமது வெற்றிக்கு பாரிய ஒரு பங்களிப்பையும், சக்தியையும் வழங்கியிருந்தது.
இந்த நாட்டில் கள்வர்களையும், ஊழல்வாதிகளையும் மாற்றியமைக்க நீங்களும் உதவியிருந்தீர்கள். தமிழர், சிங்களவர், முஸ்லிம், பேர்கர் என்ற பிரிவினைகளும், பிரிவினைவாத கட்சிகளும் இருக்கும் வரை நாட்டை ஒன்று படுத்த முடியாது.
நாம் இனம், மதம், சாதி என பிரிந்துள்ளோம். தேசிய மக்கள் சக்தி ஒரு இயக்கமாக அனைத்து மக்களையும் ஒண்றிணைத்து பயணிக்கும்.
வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்திடம் இருக்கிறது. அந்தக் காணிகள் அனைத்தையும் மீண்டும் அந்த மக்களுக்கு நாங்கள் வழங்குவோம்.
எங்களுக்குத் தெரியும் இங்கு யுத்தம் ஒன்று நடந்தது. பல்வேறு அநீதிகளுக்கு முகம் கொடுத்தோம். இன்று அரசியல் கைதிகள் உள்ளனர். அவர்களை சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமைய விரைவில் விடுதலை செய்வோம் என்று வாக்குறுதியளிக்கிறேன்.
இது சமத்துவமான ஒற்றுமையான ஆட்சி. இதனை தென்பகுதி எதிர்க்காது. ஆனால் அன்று அப்பிடி அல்ல. வடக்கில் இவ்வாறு ஒன்று நடந்தால் தென்பகுதி அதற்கு எதிராக இருந்தது. எங்களை பிரித்து அரசியல் செய்தார்கள். நாங்கள் இன்று அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்.
கேரளா கஞ்சா உட்பட போதைப்பொருள் பிரச்சனை இங்கு இங்கு இருக்கிறது. மன்னார் உள்ளிட்ட கடல் ஊடாக அவை வருகின்றன. அவற்றை தடுக்க வேண்டும். எனவே புதிய ஒரு நிலைக்கு இந்த நாட்டை அழைத்துச் செல்லவேண்டும்.
அத்துடன் எமது முதலாவது வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு நிச்சயம் இருக்கும். அதேபோல் மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் மானியம் அதிகரிக்கபடும். அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிக்கபடும்.
அது பலருக்கு கிடைக்காது அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதனை மீள் பரிசீலனை செய்வோம். பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு ஜனவரியில் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய நிதி வழங்குவோம்.
விவசாயிகளின் உரமானியத் தொகை 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கிராமய விசாயத்தை முன்னேற்றுவோம். மக்களின் வறுமையை ஒழிப்போம். மக்களது வறுமையை ஒழிந்து கிராமிய பொருளாதாரத்தின் மூலம் நாட்டை கட்டியெழுப்புவோம்.
எமது ஆட்சி 3 மாதம், 6 மாதம், 1 வருடம் என கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் சொல்கின்றோம் இந்த நாட்டை கட்டியெழுப்பும் வரை எமது ஆட்சி தொடரும்.
ராஜபக்ஸ, பிரேமதாச, ஜே.ஆர், விக்கிரமசிங்க, பண்டாரநாயக்கா என மேட்டுக் குடியிடம் இருந்த ஆட்சி அதிகாரம் தற்போது மக்களிடம் வந்துள்ளது. இந்த மாற்றத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால் புலம்புகிறார்கள்.
இந்த அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம். அவர்களுக்கு நான் ஒரு சவால் விடுகின்றேன். முடிந்தால் ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் பெற்ற வாக்கை விட ஒரு வாக்கு அவர்கள் கூட பெற்றுக் காட்டட்டும். ஆனால் எமது தேசிய மக்கள் சக்தி அதை விட அதிக வாக்குகளை பெறும் என கூறுகின்றேன்.
நவம்பர் 14 ஆம் திகதி மிளகாய் தூள்களுடனும், கத்திகளுடனும், பாராளுமன்றம் வந்து சண்டை போட்டவர்களையும், ஊழல் வாதிகளையும் களைய பாராளுமன்றத்தை சிரமதானம் செய்து கழுவி சுத்தம் செய்து திசைகாட்டியால் நிரப்பி இந்த நாட்டை மக்கள் எதிர்பார்க்கும் ஒரு நாடாக மாற்றிக் காட்டுவோம் என்றார்.
Post a Comment