Ads (728x90)

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றிற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற முறைமை தொடர்பில் 03 நாட்கள் செயலமர்வை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த செயலமர்வு எதிர்வரும் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அரசியலமைப்பு சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 18 ஆம் திகதி முதல், 20 ஆம் திகதி வரை புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நாடாளுமன்ற ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 10 மணிக்குக் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget