Ads (728x90)

சீரற்ற வானிலை விவசாயத்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய பருவத்துக்காக விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் உட்பட பல பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

எனவே மழை வெள்ளத்தால் அழிவடைந்த பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 40,000 ரூபா இழப்பீடு வழங்கப்படும் என்று விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் மற்றும் வெங்காயம் உள்ளிட்ட 6 பயிர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 40,000 ரூபாய்க்கு உட்பட்டு இழப்பீடு வழங்கப்படும்.

அழிவடைந்த பயிர்களை மீளப் பயிரிடுவதற்காக விவசாயிகளுக்கு இலவச பயிர் விதைகள் வழங்கும் முறைமை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கம் நட்டஈடு வழங்கும் 6 பயிர்களுக்கு மேலதிகமாக ஏனைய பயிர்களுக்கும் ஓரளவு நஷ்டஈடு வழங்க எதிர்பார்த்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget