Ads (728x90)

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையில் 413 மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டியதற்காக 49 ஓட்டுநர்கள் மீதும், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 110 ஓட்டுநர்கள் மீதும், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 1,086 சாரதிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடம் 694 சாரதி அனுமதிப்பத்திர விதி முறைகளை மீறிய குற்றங்களுக்காகவும் 5,324 சாரதிகள் மற்ற போக்குவரத்து விதிகளை மீறியதற்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து விதிமீறல்களுக்காக மொத்தம் 7,676 சாரதிகள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget