2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுக்கு அருகில் 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பல நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோரின் உயிர்கள் காவு வாங்கப்பட்டன.
காலை 6.58 மணியளவில் சுமாத்திரா தீவுக்கு அருகில் ஏற்பட்ட சுனாமி அலைகளில் மிக பலமான அலைகள் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் மணிக்கு காலை 09.26க்கு 800 கிலோமீற்றர் வேகத்தில் இலங்கையை தாக்கியது.
இந்த ஆழிப்பேரலை இலங்கையில் சில நிமிடங்களில் 35,000 க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்தது. என்ன நடந்தது என்பதைச் சிந்திக்க கூட நேரத்தை விட்டுவிடாமல் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அழித்தது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த பெரும் சோகத்தின் மத்தியில் மறைந்த மக்களின் நினைவாக ஆண்டுதோறும் மௌன அஞ்சலி இடம்பெற்று வருகிறது.
சுனாமி அனர்த்தம் காரணமாக பெரெலிய ரயில் நிலையத்தில் இடம்பெற்ற விபத்திற்குள்ளான ரயில் பயணிகள் மற்றும் ரயில் ஊழியர்களின் நினைவாக இன்று காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பெலியத்த வரை விசேட ரயில் ஒன்று இயக்கப்பட்டது.
பெரெலிய சுனாமி பேரிடரில் சிக்கிய ரயிலின் என்ஜினை பயன்படுத்தி இயக்கப்பட்ட ரயில், ரயில் நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு சுனாமி நினைவேந்தல் தளத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக 2 தசாப்தங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தை நினைவுகூரும் வகையில் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த வருடமும் நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் "தேசிய பாதுகாப்பு தினம்" நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், காலி "பெரெலிய சுனாமி நினைவேந்தல்" நிகழ்வும் இடம்பெற்றது.
Post a Comment