இதன்படி ஒரு பிள்ளைக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் 60 ரூபாயை 100 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்த அதிகரிப்பு எடை குறைந்த குழந்தைகளின் அதிக சதவீதத்தைக் கொண்ட பாலர் பாடசாலைகளை இலக்காகக் கொள்ளும்.
உணவு கொடுப்பனவு பெறும் முன்பள்ளி சிறார்களின் எண்ணிக்கையை 155,000ஆக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக தற்போதைய தொகை போதுமானதாக இல்லாததால், ஒதுக்கீட்டை அதிகரிக்க மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சரின் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு முதல் ஆரம்பக் குழந்தைப் பருவ மேம்பாட்டுக்கான தேசிய செயலகம், சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ், அதிக சதவீத எடை குறைந்த குழந்தைகளைக் கொண்ட மையங்கள் மற்றும் பாலர் பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு காலை உணவை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment