Ads (728x90)

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் நாட்டுப்படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. குறித்த படகில் 25 க்கு மேற்பட்ட சிறுவர்களும் உள்ளனர்.

அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர், கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த நாட்டுப்படகில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியுள்ளனர். அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டுப்படகை கரைக்கு கொண்டுவரமுடியாத நிலையில் கடற்படையினரின் கப்பல் உதவியுடன் குறித்த நாட்டுப்படகு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget