வறிய மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் இந்த நிதியத்தில் இருந்து பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உதவிகளைப் பெற்றுள்ளதாக அவர் சபையில் தெரிவித்தார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ரூபா 11 மில்லியன், ராஜித சேனாரத்னவுக்கு ரூபா 10 மில்லியன், முன்னாள் அமைச்சர் அலெக் அலுவிஹாரே ரூபா 2.2 மில்லியன் மற்றும் அவரது மகன் ரஞ்சித் அலுவிஹாரே, முன்னாள் எம்.பி. 4.6 மில்லியன், முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன ரூபா 30 மில்லியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித் சொய்சாவுக்கு ரூபா 18 மில்லியன், முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேராவுக்கு ரூபா 2.7 மில்லியன், ஜோன் அமரதுங்க ரூபா 4 மில்லியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க ரூபா 3 மில்லியன், விதுர விக்கிரமநாயக்க ரூபா 1.5 மில்லியனும் பெற்றுள்ளனர்.
இவர்களைத்தவிர மேலும் மனோஜ் சிறிசேன, தயாசிறி ஜயசேகர, பி.ஹரிசன், பி.தயாரத்ன, மேல்மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுர தேவப்பிரிய பெரேரா, பியல் நிஷாந்த டி சில்வா ஆகியோரும் அண்மைய வருடங்களில் இந்த நிதியில் இருந்து உதவி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி நிதியச் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஜனாதிபதி நிதியத்திற்கு தலைமை தாங்கியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment