ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் இன்று ஆரம்பிக்கப்பட்ட தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்திற்கு இணைவாக பிரதமர் அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பித்த போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்கென எமக்கு பாரிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பொறுப்புகள், கடமைகள் தொடர்பில் முன்னரை விட அவதானத்துடனும், பொறுப்புடனும் மக்கள் எதிர்பார்ப்பை யதார்த்தமாக மாற்றுவதற்கு பணியாற்ற வேண்டும். எமது நடத்தை, வேலை செய்யும் இயல்பு மற்றும் அனைத்து விதங்களிலும் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அதற்கென அரச ஊழியர்கள் முன்னின்று செயற்பட வேண்டுமென பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்தரி தெரிவித்துள்ளார்.
Post a Comment