Ads (728x90)

உள்நாட்டு விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது கணிசமானளவு அதிகரித்து வரும் நிலையில், விமான நிலையங்களில் வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள கருமபீடங்களுடன் மேலும் குறைந்தது 20 புதிய பதிவு கருமபீடங்களை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget