Ads (728x90)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் மேலதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 

சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கவில்லை.

இதனை தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் திருத்தம் இல்லாமல் மேலதிக பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget