Ads (728x90)

நாடு முழுவதும் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக இன்று முற்பகல் நாடு முழுவதும் மின் விநியோகத் தடை ஏற்பட்டிருந்தது.

மின்சார விநியோகத்தை மீட்டெடுக்கும் பணியில் ஊழியர்கள் செயற்பட்டு வந்த நிலையில், சில பகுதிகளுக்கு மின் விநியோகம் வழமைக்கு திரும்பியிருந்தன. தற்போது நாடு முழுவதும் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget