உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் இறுதி தீர்மானங்களை நாளை சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாக நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
நாளை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றத்தின் விசேட கூட்டத்தைக் கூட்டுவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 16 இன் கீழ் பிரதமர், சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கையின் பேரில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் நாளையதினம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலத்தை ஆராய்வதற்காகச் சம்பந்தப்பட்ட அமைச்சின் ஆலோசனைக் குழுவைக் கூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் திருத்தங்களை முன்வைப்பதாயின் அவற்றை எதிர்வரும் 17ஆம் திகதி காலை 10.00 மணிக்கு முன்னர் சர்ப்பிக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment