பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற 2025 வரவு-செலவுத் திட்டத்தின் வலுசக்தி அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சிக்கு இந்த விவாதத்தை சரியானவாறு முன்னெடுத்துச் செல்ல முடியாது போயுள்ளது. கடந்த காலங்களில் அரிசி பிரச்சினை, உப்பு பிரச்சினை தொடர்பில் கதைத்ததுடன் பல்வேறு பிரச்சினையை உருவாக்கவும் முயற்சித்தனர்.
இப்போது எரிபொருள் மாபியாக்களை உருவாக்கி இதன்மூலம் ஆட்சிக்கு வரலாம் என கனவு காண்கின்றனர். ஆனால் இது பகல் கனவாகவே இருக்கும். ஒருபோதும் எந்த நெருக்கடியும் வர இடமளிக்காது பொறுப்புடன் இந்த அரசாங்கம் நடந்துகொள்ளும். மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்பதனை நாங்கள் உறுதியாக கூறுகின்றோம்.
இந்த வரவு-செலவுத் திட்டம் வரலாற்று முக்கியத்துவமிக்கது. நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டெழும் போது முன்வைக்கப்படும் முதலாவது வரவு செலவு திட்டமாகும். அதேபோன்று கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை போன்று அல்லாது மக்கள் தொடர்பில் சிந்தித்து மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி, தேசிய வளங்களை விற்பதையும் தடுத்து நிறுத்தும் நாட்டுக்கு சாதகமான வரவு செலவுத் திட்டமாகும்.
மக்கள் கடந்த காலத்தை போன்று அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்கப்போவதில்லை. மாறாக எதிர்க்கட்சிக்கு எதிராகவே வீதிக்கிறங்குவார்கள். இதனால் எதிர்க்கட்சியினர் பொய்களை உருவாக்கும் போது பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளூமாறு கேட்டுக்கொள்கிறோம். மக்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை புரிந்துகொண்டு பொறுப்புடன் நடந்துகொள்கின்றனர். அவர்களுக்கு நாங்கள் நன்றியை கூறிக்கொள்கிறோம் என்றார்.
Post a Comment