இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார்.
முன்னாள் பொலிஸ்மா அதிபரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பல பொலிஸ் குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், அவர் தற்போது சட்டத்திற்குக் கீழ்ப்படியாமல் தலைமறைவாக உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
யாராவது அவர் தலைமறைவாக இருப்பதற்காக உதவி புரிவார்களானால், அவர்களுக்கு எதிராகவும் தண்டனைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவை மீறி தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட அதே நடைமுறையின் கீழ், முன்னாள் காவல்துறை மா அதிபரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அவருக்கு எந்த சிறப்பு சலுகைகளையும் காவல்துறையினர் வழங்க மாட்டார்கள் என்றும் புத்திக மனதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment