எதிர்வரும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தரம் 1 முதல் 6 ஆம் வகுப்புகளுக்கான புதிய கற்றல்- கற்பித்தல் செயல்முறை வகுப்பறைகளில் செயற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதற்காக அமைச்சரவை பத்திரங்களுக்கான தகவல்களை வழங்குதல், ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை ஏற்பாடு செய்தல், தொகுதிகளை தயாரித்தல், புத்தகங்களை தயாரித்தல் போன்ற சீர்திருத்த செயல்முறைகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி நிறுவனத்தின் அதிகாரிகள் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு அதிகபட்ச அர்ப்பணிப்பை வழங்கியுள்ளதாகவும் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment