Ads (728x90)

தாதியர் சேவையில் இணைக்கப்படவுள்ள 3,147 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் மே 24 சனிக்கிழமை மு.ப. 9.30 மணிக்கு அலரி மாளிகை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்டன் இணைந்ததாக, தாதியர் சேவையில் பணியாற்றும் 79 விசேட தர அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் தாதியர் சேவை வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என சுகாதார அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன் நடைபெறும் இவ்விழாவில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர், வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget