Ads (728x90)

நம்முடைய வீட்டில் ஏற்படும் பல விதமான பிரச்சனைகளுக்கு தீயசக்திகளின் நடமாட்டமே காரணம் என சொல்லப்படுகிறது. வாஸ்து சாஸ்திரப்படி, சில சிறிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தாலே வீட்டில் உள்ள தீயசக்திகள் அனைத்தும் ஓடி விடும் என சொல்லப்படுகிறது.

உப்பு ஒரு இயற்கையான சுத்திகரிப்பு பொருள். இது சுற்றுப்புறத்தில் உள்ள கெட்ட சக்தியை உறிஞ்சி, நல்ல சக்தியை உருவாக்குகிறது. தினமும் வீட்டில் துடைக்கும் போது தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்தால், வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் நீங்கும். 

மன அழுத்தம், சண்டை சச்சரவுகள் குறையும். வீட்டில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உடல் மற்றும் மனதிற்கு நல்ல பலன் கிடைக்கும். வீட்டில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உறவுகள் மேம்படும், வீட்டில் பணம் பெருகும், தூக்கம் நன்றாக வரும். வீட்டில் நல்ல அதிர்வுகள் ஏற்படும். கெட்ட கண் பார்வையில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உருவாகும். இந்த எளிய பரிகாரத்தை தினமும் செய்து வந்தால் வீட்டில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். 

குறிப்பாக செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இதை தவறாமல் செய்ய வேண்டும். பூஜை அறையை உப்பு கலந்த தண்ணீரால் துடைக்க கூடாது. வீட்டில் யாராவது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அவர்கள் அறையில் இதை தவறாமல் செய்ய வேண்டும்.

உப்பிட்டவரை உள்ளளவும் நினை. உப்பிட்டவருக்கு துரோகம் எண்ணாதே என்ற பழமொழியின் பின்னால் நிறைய உண்மைகள் உண்டு. உப்பு சக்தி வாய்ந்தது. அது சுவை மட்டும் கொடுக்கும் பொருள் அல்ல. உப்பு மகாலட்சுமியின் அம்சம். நிறைய சம்பிரதாயங்கள் உப்பை வைத்தே செய்யப்படும். உப்புக்கு வறுமையை விரட்டும் சக்தி உண்டு. 

சனியின் கடுமையான தோசங்களை போக்க இரும்பு சட்டியில் உப்பு போட்டு தானமாக தருவதால் கடும் துன்பம் தீரும். வெள்ளிக்கிழமை உப்பு வாங்குவதால் அதிர்ஷ்டம் பெருகும்.

உப்பு மீது சத்தியம் செய்து விட்டு அதை மீறினால் கடுமையான துன்பங்கள் வந்து சேரும். இன்றளவும் உப்பு மீது சத்தியம் செய்து விட்டு கடன் வாங்குவோர் உண்டு. 

Post a Comment

Recent News

Recent Posts Widget