Ads (728x90)

339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,287 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி 4 மணி வரை இடம்பெற்றது.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேட்சை குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி 75,589 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் நாடளாவிய ரீதியில் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று 4 மணி வரையான நிலவரப்படி:

கொழும்பு மாவட்டத்தில் 50 % வாக்குப் பதிவும்

பதுளை மாவட்டத்தில் 60 % வாக்குப் பதிவும்

பொலன்னறுவை மாவட்டத்தில் 53 % வாக்குப் பதிவும்

நுவரெலியா மாவட்டத்தி 60 % வாக்குப் பதிவும்

களுத்துறை மாவட்டத்தில் 61 % வாக்குப் பதிவும் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 % வாக்குப் பதிவும்

மன்னார் மாவட்டத்தில் 70 % வாக்குப் பதிவும்

அநுராதபுரம் மாவட்டத்தில் 60 % வாக்குப் பதிவும்

பொலன்னறுவை மாவட்டத்தில் 64 % வாக்குப் பதிவும்

மொனராகலை மாவட்டத்தில் 61 % வாக்குப் பதிவும்

கேகாலை மாவட்டத்தில் 58 % வாக்குப் பதிவும்

காலி மாவட்டத்தில் 63 % வாக்குப் பதிவும்

வவுனியா மாவட்டத்தில் 60 % வாக்குப் பதிவும்

திகாமடுல்ல மாவட்டத்தில் 63 % வாக்குப் பதிவும்

புத்தளம் மாவட்டத்தில் 55 % வாக்குப் பதிவும்

திருகோணமலை மாவட்டத்தில் 68 % வாக்குப் பதிவும்

மாத்தறை மாவட்டத்தில் 58 % வாக்குப் பதிவும்

மாத்தளை மாவட்டத்தில் 62 % வாக்குப் பதிவும்

இரத்தினபுரி மாவட்டத்தில் 60 % வாக்குப் பதிவும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 % வாக்குப் பதிவும்

கிளிநொச்சி மாவட்டத்தில் 60 % வாக்குப் பதிவும் 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 56 % வாக்குப் பதிவும்

இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Post a Comment

Recent News

Recent Posts Widget