மே மாதம் 3ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் வேட்பாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டால் அது பாரதூரமான குற்றமாகக் கருதப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 6ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினத்துக்கு பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக எந்தவொரு வேட்பாளரும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment