அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்திலிருந்து தான் விலகவுள்ளதாக அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறைத் தலைவரும், தொழிலதிபருமான ஈலோன் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அப்பதிவில் அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த அவர், அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத்துறைத் தலைவருக்கான பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில் தான் அந்த பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து எலான் மஸ்க் கூறியதாவது, செயல்திறன் மேம்பாட்டுக்காக உருவான துறையின் முக்கிய நோக்கம் காலத்தோடு வலுவடையுமென்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் டிரம்பின் புதிய வரி மசோதாவுக்கு எதிராக மஸ்க் கருத்து தெரிவித்திருந்தார். இதில் ஏமாற்றப்பட்டேன் எனக் கூறிய மஸ்க், அதற்குப் பிறகு அரசுப் பணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
Post a Comment