Ads (728x90)

கனடா பிரம்டன் நகரில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இன்று திறந்து வைக்கப்பட்டது. தமிழின அளிப்பு நினைவகம் என்னும் பெயரில் இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது.

கனடாவில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை நிர்மாணிப்பதில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் நினைவுதூபி திறப்பு விழாவில் கருத்து வெளியிட்டுள்ளார். 

நாங்கள் தமிழர்கள் இனவழிப்பின் அளவை மறக்ககூடாது எனவும் அவர் தெரிவித்தார். ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செயப்பட்டார்கள், இலங்கை அரசாங்கம் தவறான தகவல்களை பரப்பிவருகின்றது என தெரிவித்த பிரம்டன் மேயர் உண்மைக்காகவும், நீதிக்காவும் குரல்கொடுத்த தமிழர்களை இழிவுபடுத்தவும் தாக்கவும் முயன்றனர், இது ஒரு உடல்ரீதியான இனப்படுகொலை மாத்திரமல்ல உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் மீதான தாக்குதல் என தெரிவித்தார்.

தமிழர் படுகொலை நினைவுதூபி எனது நகரத்தில் உருவாகியுள்ளமை குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன். ஆனால் இன்னமும் செய்யவேண்டிய பணிகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை எங்கள் கூட்டு வரலாற்றின் முக்கிய தருணமாகும் என கனடாவின் நீதியமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இந்த நினைவுத்தூபி இலங்கையில் அரசாங்கத்தினால் தமிழர்களிற்கு எதிரான இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் நினைவுச்சின்னமாக விளங்குகின்றது.

உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் வலிமை மற்றும் மீள் எழுச்சி தன்மையை இது கௌரவிக்கின்றது என தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget