Ads (728x90)

அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் ரொபர்ட் பிரிசொவ்ட் பாப்பாண்டவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உலக வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்கர் ஒருவர் பாப்பாண்டவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த விடயத்தை வத்திக்கான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கர்தினால்களினால் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் மூலம் புதிய பாப்பாண்டவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாப்பாண்டவராக தெரிவானதன் பின்னர் முதல் தடவையாக பாப்பாண்டவர் ரொபர்ட் வத்திக்கான் பீட்டர்ஸ் தேவாலய பல்கனியில் தோன்றி தனது முதல் உரையை நிகழ்த்தவுள்ளார்.

நேற்றைய தினமும் இன்றைய தினமும் நடைபெற்ற நான்கு சுற்று வாக்கெடுப்புக்களின் பின்னர் பாப்பாண்டவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


Post a Comment

Recent News

Recent Posts Widget