Ads (728x90)

கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையான தமிழ் மொழிமூல மாணவர்களுக்கு சிங்கள மொழியையும், சிங்கள மொழிமூல மாணவர்களுக்குத் தமிழ் மொழியையும் இரண்டாம் மொழிப் பாடமாகக் கட்டாயமாக்குவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் முன்வைத்த கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் தெரிவித்தார்.

தற்போது சகல பாடசாலைகளிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையான தமிழ் மொழிமூல மாணவர்களுக்கு சிங்கள மொழியும், சிங்கள மொழி மூல மாணவர்களுக்குத் தமிழ் மொழியும் இரண்டாம் மொழிப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது.

இதுதவிர 10 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் தமிழ் மொழிமூல மாணவர்களுக்கு இரண்டாம் மொழியாக சிங்கள மொழியையும், சிங்கள மொழி மூல மாணவர்களுக்குத் தமிழ் மொழியையும் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 2026 ஆம் ஆண்டு முதல் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்படவுள்ளதுடன், அதற்கு அடுத்த ஆண்டுகளில் ஏனைய வகுப்புகளின் பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதன்போது மாணவர்களுக்கான இரண்டாம் மொழிப் பாடமாகத் தமிழ் மொழி மற்றும் சிங்கள மொழி கற்பிக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget