Ads (728x90)

கனடா பலமானதும் சுதந்திரமானதுமாக இருக்க வேண்டுமென மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கனடிய நாடாளுமன்றில்அக்கிராசன உரை நிகழ்த்திய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகம், பல்வகைமை, சட்ட ஆட்சி, தன்னாட்சி மற்றும் சுதந்திரம் போன்ற அடிப்படை கோட்பாடுகளை பாதுகாப்பதற்கான காவலாளிகளாக இருக்க வேண்டும் எனவும் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் வரி மற்றும் வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்கு நேர்மாறாக, திறந்த வர்த்தகத்தின் பலன்கள் குறித்தும் மன்னர் உரையில் குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஜனநாயகத்தின் காப்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் எனவும் மன்னர் வலியுறுத்தியுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget