Ads (728x90)

மிக நீண்ட காலமாக பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்படாது கைவிடப்பட்ட நிலையில் இருந்த கந்தளாய் சீனி தொழிற்சாலையின் 2,000 ஏக்கர் விவசாய நிலம், சோள செய்கைக்காக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்நிகழ்வு விவசாய, கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் திரு. கே.டி. லால்காந்த மற்றும் விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ஆகியோரின் தலைமையில் கந்தளாய் சீனி தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது.

விவசாயிகளின் பொருளாதாரத்திற்கு பலம் அளிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன, திருகோணமலை மாவ‌ட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget