இத்தாக்குதலில் ஈரானின் ஆயுத படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் மொஹமட் ஹொசைன் பாகெரி கொல்லப்பட்டதாக ஈரான் அரச ஊடகங்கள் அறிவித்துள்ளன.
ஹொசைன் பாகெரி 2016 ஆம் ஆண்டு முதல் ஈரானின் இராணுவ தலைமை அதிகாரி பதவியை வகித்து வந்தவராவார். அவர் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தின் முக்கிய கட்டமைப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
இந்த தாக்குதலின்போது, ஈரானின் தலைநகர் தெஹ்ரான உட்பட பல்வேறு நகரங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பாகெரியுடன் சேர்ந்து மூத்த இராணுவ அதிகாரிகள் மற்றும் அணு ஆராய்ச்சி விஞ்ஞானிகள் சிலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலின் இத்தாக்குதலின் நோக்கம் ஈரான் அணு ஆயுதத்தை பெறுவதைத் தடுப்பதாகவும், தங்கள் மக்களுக்கு ஏற்படும் உயிரியல் அச்சுறுத்தலை நீக்குவதற்காகவும் உள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் முதல் கட்டமாகும். தேவைப்பட்டால் பல நாட்கள் தொடரும் என அறிவித்துள்ளார்.
Post a Comment