ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் உலகளாவிய மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான அறிக்கையுடன் ஜெனீவாவில் இந்தக் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. அதன் விடயதானம் மற்றும் நேர ஒழுங்கு அட்டவணையில் இலங்கையுடன் தொடர்புடைய விடயங்கள் உள்வாங்கப்படவில்லை.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரிலேயே இலங்கை தொடர்பில் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கை வெளியிடப்படவுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை குறித்த புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவருவது குறித்தும் ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இந்தக் கூட்டத்தொடருக்கு மத்தியில், எதிர்வரும் 23ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment