எந்தவொரு அரசியல்வாதியோ அல்லது அரச அதிகாரியோ இவ்வாறான செயலில் ஈடுபட்டால், தரம் பாராமல் அதிகபட்ச தண்டனை வழங்க தலையிடுவேன் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, மக்கள் செலுத்தும் வரிகளுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அதற்கு எதிராக செயல்படும் கருப்புப் பொறிமுறையை முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று காலை நடைபெற்ற ‘தேசிய வரி வாரத்தின்’ தொடக்க விழாவில் பேசிய ஜனாதிபதி, பொதுப் பணத்தின் ஒவ்வொரு ரூபாயும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக தனது சொந்த உத்தியோகபூர்வ செலவினங்களை முடிந்தவரை குறைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மோசடியால் நிலைநிறுத்தப்பட்ட கறுப்புப் பொருளாதாரத்தை ஒழிப்பதாகவும், பொது நிதியைப் பாதுகாக்க ஒரு சட்டபூர்வமான மற்றும் பொறுப்புணர்வுள்ள அமைப்பை நிறுவுவதாகவும் அவர் உறுதியளித்தார்.
தற்போதைய அரசாங்கம் ஸ்தம்பிதமடைந்த ஒரு நாட்டைக் பொறுப்பேற்றதாகவும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வரி பொறிமுறையை நெறிப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
ஒரு நாடாக நாம் தகுதிகாண் காலத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்த ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் உடன்படிக்கையை இந்நாட்டின் அவ்வாறான இறுதி வேலைத்திட்டமாக மாற்றுவதன் மூலம் நமக்கே உரிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு சகல மக்களையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
Post a Comment