Ads (728x90)

அஹமதாபாத் நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் தடவையாக ஐபிஎல் கிண்ணத்தை சுவீகரித்தது.

சம்பியனான றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 68 கோடி ரூபாவும், இரண்டாம் இடத்தைப் பெற்ற பஞ்சப் கிங்ஸுக்கு 45 கோடி ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்பட்டது.

முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றது.

றோயல் செலஞ்சர்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 191 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.


Post a Comment

Recent News

Recent Posts Widget