Ads (728x90)

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் 12 நாட்கள் நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தம் அமுலாகி உள்ளதாக ஈரான் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அந்நாட்டு அரச ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக ஈரான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருந்த நிலையில் தற்போது இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதேவேளை இருதரப்பும் போர் நிறுத்தத்தை மீறும் வகையில் செயற்பட வேண்டாமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget