Ads (728x90)

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. 

அதன்படி லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில் அதன் புதிய விலை 289 ரூபாவாகும். 

மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில் அதன் புதிய விலை 185 ரூபாவாகும். 

மேலும் 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில் அதன் புதிய விலை 305 ரூபாவாகும் எனவும், சுப்பர் டீசல் மற்றும் ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலைகளில் மாற்றமில்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

Post a Comment

Recent News

Recent Posts Widget