தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழுவின் அறிக்கை தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.
தேஷபந்து தென்னகோன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவில் தலைவராக உயர் நீதிமன்ற நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி நீல் இத்தவெல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
Post a Comment