Ads (728x90)

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிப் பெற்றுள்ளது. 

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி துடுப்பாடத் தீர்மானித்தது. 

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை பெற்றது. 

இதன்படி 133 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 16.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை 2:1 என்ற அடிப்படையில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget