நெல், நாற்று சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய், சோயா போன்ற பயிர்களை பயிரிடுவதற்காக 87,690 ஏக்கர் நிலத்தில் பயிரிடும் 74,958 விவசாயிகளுக்கு 1,484 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளை அதிகமாக அறுவடை செய்ய ஊக்குவிக்கும் நோக்கில், இலவச பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த பயிர் சேத இழப்பீடு வழங்கப்பட்டதாக கமத்தொழில் அமைச்சு மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.
வரட்சி, வெள்ளம் மற்றும் வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கு, ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 100,000 ரூபா வரை இழப்பீடு வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment